ஓமலூர் அருகே 20 வயதான இளம்பெண் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்து இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Update: 2019-05-17 18:55 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்து இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளாளபட்டி அருகே உள்ள கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி ராஜகோபாலின் மனைவி சங்கீதா. இருவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு, தோட்டத்தில் புல் அறுக்கச் சென்ற சங்கீதா, கால் தவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர், உயிரிழந்த சங்கீதாவை கயிறு கட்டி மீட்டனர். அப்போது, கிணற்றுக்குள் வைத்திருந்த மோட்டார் மேடையில், மோதியதில் சங்கீதாவின் தலையில் பலத்த காயமடைந்தது தெரியவந்தது.
Tags:    

மேலும் செய்திகள்