கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கு : திலகவதி தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மாணவி திலகவதி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Update: 2019-05-15 02:59 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம்  அருகே பவழங்குடி கிராமத்தை சேர்ந்த திலகவதி என்ற மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக  பேரளையூர் கிராமத்தை சேர்ந்த  ஆகாஷ் என்ற இளைஞரை 
போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி திலகவதியின் தந்தை சுந்தரமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

தற்போதைய விசாரணை அதிகாரி, குற்றவாளிக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் தெரிவித்துள்ள அவர்,  பாதிக்கப்பட்ட தனது  குடும்பத்திற்கு அரசு அளிக்கும் இடைக்கால இழப்பீட்டு  தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்  என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த  வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்