நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக சந்திரசேகர ராவ் திருப்தி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2019-05-14 03:41 GMT
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அவருக்கு, பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேட்டரி கார் மூலம் பிரகாரங்களில் சென்று கருடாழ்வார், ரங்கநாதர் மற்றும் ரங்கநாயகி தாயாரை தரிசனம் செய்தார். அரங்கநாதர் கோயிலில் வழிபட வேண்டும் என்ற தமது, நீண்டநாள் ஆசை நிறைவேறியதாக, அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்