விடுமுறை நாளில் பள்ளிகளை நடத்தக்கூடாது - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் மீண்டும் கண்டிப்பு

தமிழக அரசின் உத்தரவை மீறி, பல இடங்களில் தனியார் பள்ளிகள் இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2019-05-01 10:00 GMT
பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.விடுமுறை நாளில் பள்ளிகளை நடத்தக்கூடாது என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.அரசு உத்தரவிட்ட நிலையிலும், மாநிலம் முழுவதும் பல தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயங்கி வருவதாக புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.எந்த காரணம் கொண்டும்,விடுமுறை நாளில் பள்ளிகளை நடத்தக் கூடாது எனவும், தொடர்ந்து விதிகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் மீண்டும் எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்