நிதி நிறுவனத்தில் 803 சவரன் கொள்ளை போன வழக்கு

கோவையில் முத்தூட் மினி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் நாடகமாடிய பெண் ஊழியர் ரேணுகாதேவி, மற்றும் அவரது காதலன் சுரேஷ் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-04-30 11:33 GMT
கோவையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் பெண் ஊழியர்களை  தாக்கி, கடந்த 27-ந் தேதி முகமூடி கொள்ளையன் ஒருவன் புகுந்து, 803 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றான். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், 4 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரேணுகா மற்றும், அவரது முன்னாள் காதலன் சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேணுகா அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், தங்க நகைகள் கேரளா கொண்டு செல்லப்பட்டு உருக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்