குடும்ப தகராறால் நிகழ்ந்த விபரீதம் - மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்

குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-04-21 19:45 GMT
வேலூர் மாவட்டம் மசிகம் கிராமத்தில் உள்ள முனிசாமி என்பவரின் கோழிப்பண்ணையில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திக்-ஜெயக்கொடி தம்பதி கூலி வேலை செய்து வந்தனர். திருமணமாகி 6 ஆண்டுகளான இவர்களுக்கு  2 ஆண் குழந்தைகள். அவ்வப்போது குடும்ப தகராறில் நடந்த நிலையில் ஞாயிறு அன்று ஆத்திரமடைந்த கார்த்திக் மனைவி ஜெயக்கொடியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வீட்டினுள் ஜெயக்கொடி உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஜெயக்கோடியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். மனைவியை கொலைசெய்துவிட்டு கணவர் கார்த்திக் தப்பியோடிவிட்டதால்  அவர்களின் 2 குழந்தைகள் நிர்கதியாகியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்