"நந்தினி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கலவரத்துக்கு காரணம்" - திருமாவளவன் குற்றச்சாட்டு
அரியலூர் பொன்பரப்பியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக நேற்று அதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைக் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
அரியலூர் பொன்பரப்பியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக நேற்று அதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைக் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன், சிறுகடம்பூர் நந்தினி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் தான் இந்த கலவரத்திலும் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கலவரம் நடந்த கிராமத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் ஏற்க மறுத்து விட்டதாக தெரிவித்தார்.