நாட்டரசன்கோட்டை : பச்சைப் பட்டுடுத்தி வெள்ளி குதிரை வாகனத்தில் கள்ளழகர் - கோவிந்தா கோஷத்துடன் கள்ளழகரை வழிபட்ட பக்தர்கள்

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் உள்ள பிரசன்ன வெங்கடஜலபதி பெருமாள் கோயிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது.

Update: 2019-04-19 11:52 GMT
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் உள்ள பிரசன்ன வெங்கடஜலபதி பெருமாள் கோயிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது.
பச்சைப் பட்டுடுத்தி வெள்ளி குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனை காட்டபட்டு மேளதாளம் முழங்க, யானை, நாட்டிய குதிரைகள் முன் செல்ல கள்ளழகர் பத்துபணி ஆற்றில் இறங்கினார். கோவிந்தா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசித்து வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்