மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமகன்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இன்று திருமணம் செய்து கொண்ட மணமகன் முத்துராம், மணக்கோலத்தில் தனது வாக்கை செலுத்தினார்.

Update: 2019-04-18 10:34 GMT
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இன்று திருமணம் செய்து கொண்ட மணமகன் முத்துராம், மணக்கோலத்தில் தனது வாக்கை செலுத்தினார். வள்ளியூரை சேர்ந்த முத்துராமிற்கும், களக்காட்டை சேர்ந்த சுப்பு லட்சுமிக்கும் வள்ளியூரில் இன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக பெண்ணை அழைத்து வரும்போதே மணமகள் சுப்புலட்சுமி தனது வாக்கை களக்காட்டில் உள்ள வாக்குசாவடியில் பதிவு செய்து விட்டு வந்துள்ளார். மணமகன் முத்துராம் வள்ளியூர் முருகன் கோயிலில் திருமணத்தை முடித்துவிட்டு, மணக்கோலத்தில் மணமகளுடன் வள்ளியூர் இரட்சன்ய சேனை பள்ளியில் உள்ள வாக்குசாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்