கி.வீரமணி மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார்

இந்து மதம் தெய்வங்களை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு

Update: 2019-03-29 12:20 GMT
இந்து மதத்தையும், இந்து மக்களின் தெய்வங்களை பற்றியும் அவதூறாக பேசிய திராவிடர் கழக  தலைவர் கி.வீரமணியை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி,  இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் செந்தில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்,  வீரமணி பேச்சு, உலகெங்கிலும் வாழும் இந்துக்களின் மத உணர்வையும், நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்