ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டி

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதியில் அக்கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி, மீண்டும் போட்டியிடுகிறார்.

Update: 2019-03-16 03:51 GMT
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதியில் அக்கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி, மீண்டும் போட்டியிடுகிறார். இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஈரோடு தொகுதியில் 2 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கணேசமூர்த்தி, கடந்த தேர்தலில், அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்து, 2 - வது இடம் பிடித்திருந்தார்.
ஈரோட்டில் மதிமுக மீண்டும் போட்டியிடுவதால், அக்கட்சி தொண்டர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்