கத்தியை காட்டி மிரட்டி கடைகளில் பணம் பறிப்பு

சென்னை செம்மஞ்சேரியில், கடைகளில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்ற நபரை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் தேடி வருகின்றனர்

Update: 2019-02-19 02:10 GMT
சுனாமி நகரில் சேஷாரம் என்பவர் மளிகை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சென்ற கருப்பு என்பவர், கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் பறித்து சென்றுள்ளார். இதேபோல் எலக்டிரிக்கல் கடை ஒன்றிலும் பணம் பறித்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்