கடலூர் : 4 டன் எடை கொண்ட திருக்கை மீன்கள் - ஏலம் எடுப்பதில் போட்டாப்போட்டி

கடலூரில் நான்கு டன் எடை கொண்ட இரண்டு திருக்கை மீன்களை பார்த்த பொது மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Update: 2019-02-18 04:15 GMT
கடலூரில் நான்கு டன் எடை கொண்ட இரண்டு திருக்கை மீன்களை பார்த்த பொது மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஆழ்கடலுக்கு சென்று விட்டு திரும்பிய மீனவர்கள் வலையில், தலா இரண்டு டன்கள் எடை கொண்ட இரண்டு திருக்கை மீன்கள் பிடிப்பட்டன. இந்த மீன்களை ஏலம் எடுப்பதில், வியாபாரிகள் போட்டி போட்ட நிலையில், 70 ஆயிரம் ரூபாய்க்கு அந்த 2 மீன்களும் விலைபோனதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்