காதல் திருமணத்திற்கு உதவியதால் இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல்

ஓசூர் அருகே காமன்தொட்டி என்ற கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் மீது, காதல் திருமணத்திற்கு உதவியதாக கூறி கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-02-17 20:44 GMT
ஓசூர் அருகே காமன்தொட்டி என்ற கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் மீது, காதல் திருமணத்திற்கு உதவியதாக கூறி கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசன்னா என்பவரது காதல் திருமணத்திற்கு, அவரது நண்பர்களான மகேஷ், தியாகு ஆகியோர் உதவியதாக தெரிகிறது. இதனால், பெண்ணின் உறவினர்களான கோனேரிபள்ளி கிராமத்தை சேர்ந்த, சந்தீப், தனுஷ் ஆகியோர் இவர்களை கொல்ல திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி,காமன் தொட்டிக்கு வந்த மகேஷ் தியாகுவை, சந்தீப் மற்றும் தனுஷ் சராமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்