அப்பா உடல் வீட்டில் இருக்க.. கண்ணீர் ததும்ப +2 தேர்வெழுதிய மாணவன்.. ரிசல்ட்டில் தந்த ஆசீர்வாதம்

Update: 2024-05-06 07:53 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வில், 358 மதிப்பெண்கள் எடுத்து மாணவன் ஒருவன் சாதனை படைத்துள்ளார். கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வேடன் வயல் கிராமத்தை சேர்ந்த மாணவன் தருண் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பண்ணிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், மார்ச் 3ஆம் தேதி அவரது தந்தை உடல் நலக்குறைவால் இறந்து போனார். தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவன் தருண், தற்போது வெளியான தேர்வு முடிவில் 600க்கு 358 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து, மாணவன் தருணுக்கு குடும்பத்தினர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்