காவல் நிலையத்தில் லாரியின் பின் சக்கரங்கள் திருட்டு

ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிப்பட்டியில், காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில், சக்கரங்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-02-16 04:52 GMT
ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிப்பட்டியில், காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில், சக்கரங்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணல் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அந்த லாரியை போலீசார், காவல் நிலையத்தின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்துள்ளனர். இதையடுத்து  உரிமையாளர் அந்த லாரியை மீட்கச் சென்ற போது, பின் சக்கரங்கள் இல்லாமல் அந்த லாரி நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாரிடம் அவர் புகார் அளித்த நிலையில், காவல் நிலைய வேலியை உடைத்து லாரியின் பின் சக்கரங்கள் திருடப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்