கால்நடை மருத்துவர் தற்கொலை : கால்நடை உதவி இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

திருத்தணி அருகே கால்நடை மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கால்நடை உதவி இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடைபெற்றது.

Update: 2019-02-07 21:03 GMT
திருத்தணி அருகே உள்ள பாலாபுரம் பகுதியை சேர்ந்த கால்நடை மருத்துவர் சிவா தூக்கு போட்டு தற்கொலை கொண்டார். கால்நடை உதவி இயக்குநராக உள்ள மகேந்திரன் தகாத வார்த்தைகளால் திட்டியதே சிவாவின் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இந்த நிலையில் கால்நடை உதவி இயக்குநர் மகேந்திரன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கால்நடை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்