வடமாநில இளைஞர் அடித்துக் கொலை : 3 பேரை பிடித்து போலீஸ் விசாரணை..
கொள்ளையடிக்க வந்த வடமாநில இளைஞரை பொதுமக்கள் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொள்ளையடிக்க வந்த வடமாநில இளைஞரை, பொதுமக்கள் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொசவன்புதூர் கிராமத்தில் கலாநந்தன் என்பவரது வீட்டுக்கு நேற்று இரவு, இரண்டு வடமாநில கொள்ளையர்கள் நுழைந்ததாக கூறப்படுகிறது. பொதுமக்களிடம் அகப்பட்ட வட மாநில இளைஞர் ஒருவரை அவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில், அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால், மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.