போலீசை தாக்கிவிட்டு தப்பி ஓடியவருக்கு தர்ம அடி...

போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய அந்த நபரை மக்கள் துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

Update: 2019-02-04 22:46 GMT
சென்னை பல்லாவரத்தில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கு இடமாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய அந்த நபரை, மக்கள் துரத்தி பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். பின்னர், இரு கைகளையும் கட்டி காவலர்களிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திரிசூலம் மலை மேடு பகுதியை சேர்ந்த பாலாஜி என்பதும், அவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து பாலாஜியை கைது செய்த போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்