பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் : மாணவர்களுடன் பெற்றோர் மறியல்

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கடந்த நான்கு நாட்களாக ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் சிரமம் அடைந்தனர்.

Update: 2019-01-28 11:38 GMT
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கடந்த நான்கு நாட்களாக ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் சிரமம் அடைந்தனர். இதனைக் கண்டித்து, துரைப்பாக்கம் சிக்னல் அருகே மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்