நாமக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
நாமக்கல் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 17 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது.
நாமக்கல் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 17 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் வராத 17 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக சோதனையில் ஈடுபட்ட போலீசார் தெரிவித்தனர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.