ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கணேசன் என்பவர் தீக்குளிக்க முயன்றார். அந்தியூரில் பேக்கரி நடத்தி வரும் அவர் தர்மலிங்கம் என்ற முட்டை வியாபாரியிடம் 25 லட்ச ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். அதற்கு 68 லட்ச ரூபாய் வட்டியாக செலுத்தியும் தர்மலிங்கம் பணம் கேட்டு கணேசனை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கணேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.