பொங்கல் அன்று இயங்கிய தனியார் பள்ளி

திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரத்தில் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் அன்று அரசு உதவிபெறும் தனியார் பள்ளி திறக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

Update: 2019-01-17 18:26 GMT
திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரத்தில் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் அன்று அரசு உதவிபெறும்  தனியார் பள்ளி திறக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காமலாபுரத்தில் இயங்கி வரும் அரசு உதவிப் பெறும் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 20 கிராம மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் அன்று மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காமல் பள்ளி இயங்கியது. இதனால் பண்டிகையை கொண்டாட முடியாத மாணவர்கள், பள்ளிக்கு சென்றனர். அரசு உத்தரவை மதிக்காமல் பண்டிகை தினத்தன்று பள்ளி இயங்கியது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்