தந்தையை தெருவில் தூக்கி வீசிய மகள்

சொத்து தகராறு காரணமாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை அவரது மகள் மற்றும் உறவினர்களே குண்டு கட்டாக தூக்கி தெருவில் வீசிய சம்பவம் ஓசூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-01-13 11:15 GMT
ஒசூர் மூவேந்தர் நகர் பகுதியில் வசித்து வருபவர் தனராஜ். 80 வயதாகும், ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான இவருக்கு ராஜ்குமார், பாபு என்ற இரண்டு மகன்களும், தனலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். தனராஜ்க்கும் அவரது மகள் தனலெட்சுமி மற்றும் மருமகன் பாலமுரளி ஆகியோருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து தகாராறு இருந்து வருகிறது. இந்நிலையில் தகராறு முற்றி தனராஜ் வசித்த வீட்டிலிருந்த கட்டில், மெத்தை உள்ளிட்ட  பொருட்களை தெருவில் வீசியுள்ளனர். மேலும், 80 வயதான தனராஜையும் தெருவில், குண்டுக்கட்டாக தூக்கி வீசியதால், பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஒசூர் ஹட்கோ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்