சென்னை : முன் விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக் கொலை

சென்னையில் முன் விரோதம் காரணமாக, ரவுடி ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-01-13 07:36 GMT
சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்தவர் அப்பு என்கின்ற தினேஷ். ரவுடியான இவர் மீது வழிப்பறி, கொலை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு, சென்னை ஓட்டேரியில் உள்ள பின்னி மில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த அப்புவை வழிமறித்த ஒரு கும்பல், அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அப்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதையடுத்து, கொலை தொடர்பாக சதிஷ் மற்றும் சசிகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தங்களது சகோதரரை அப்பு வெட்டிக் கொன்றதாகவும் அதற்கு பழி தீர்க்கும் விதத்தில், அப்புவைக் கொன்றதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். பழிக்குப்பழி வாங்க நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்