கர்நாடகாவில் நிராகரிக்கப்பட்ட சைக்கிள் தமிழக அரசால் வழங்கப்பட்டதா? : சைக்கிள்களில் கன்னட எழுத்துக்களால் பரபரப்பு

கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்பட்டு தரமற்றவையாக கருதி நிராகரிக்கப்பட்ட சைக்கிள்கள், தமிழக அரசால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2018-12-02 05:06 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சைக்கிள் வழங்கப்பட்டது. சைக்கிள் கூடையில் கர்நாடக அரசு முத்திரை பதிக்கப்பட்டு, கன்னட மொழியில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. அந்த சைக்கிள்கள், கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்பட்டு தரமற்றவையாக கருதி அம்மாநில அரசால் நிராகரிக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்