"கஜா சீரமைப்பு பணிகளுக்காக மத்திய அரசிடம் என்னென்ன உதவிகள் கேட்கப்பட்டன?" - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்காக, மத்திய அரசிடம் என்னென்ன உதவிகள் கேட்கப்பட்டன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-22 09:42 GMT
கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்காக, மத்திய அரசிடம் என்னென்ன உதவிகள் கேட்கப்பட்டன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, புயலால் பாதிக்கப்பட்ட குக்கிராமங்களுக்கு மின்சாரம், பிரதான சாலைகளுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை உடனடியாக செய்து தர வேண்டும் எனவும், புயல் பாதிப்புகளை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
Tags:    

மேலும் செய்திகள்