சென்னை கோட்டை கொத்தளத்தில் கிழிந்த நிலையில் பறந்த தேசிய கொடி

சென்னை கோட்டை கொத்தளத்தில் கிழிந்த நிலையில் பறந்து கொண்டிருந்த தேசிய கொடி பற்றி தகவல் வெளியானதும் மாற்றப்பட்டது.

Update: 2018-11-21 07:15 GMT
தலைமைச் செயலகத்தில் தினமும் காலை ஆறு மணியளவில் ராணுவ அதிகாரிகள் தேசிய கொடியை ஏற்றுவார்கள். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில்  இன்று ஏற்றப்பட்ட தேசிய கொடி காற்று மற்றும் மழை காரணமாக கிழிந்து பறந்து வருவது குறித்து தகவல் வெளியானது. இதனால் மாலை 6 மணிக்கு இறக்கப்படும் தேசிய கொடியை வழக்கத்திற்கு மாறாக ராணுவ வீரர்கள் இறக்கி புதிய தேசிய கொடியை ஏற்றியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்