கஜா கோரதாண்டவம் எதிரொலி - வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவ கிராம மக்கள்

கஜா புயலால், நாகை மாவட்டம் காமேஸ்வரம் மீனவ கிராமம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-18 09:28 GMT
கடற்கரை பகுதியான காமேஸ்வரம் பகுதியில் கஜா புயலின் போது வீசிய சூறாவளி காற்றால், ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதேபோல் ஆங்காங்கே மரங்களும் முறிந்து கிடக்கின்றன. நாட்டு படகு, பைபர் மற்றும் விசைப்படகுகள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வீசப்பட்டு கிடப்பதால் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிப்பதாகவும், உணவு கூட கிடைக்காமல் சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்