தந்தையை தீயிட்டு கொளுத்தியதாக மகன் மீது புகார்

சென்னையில் குடும்ப தகராறு காரணமாக தந்தையை , மகன் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-11-10 12:06 GMT
சென்னையில் குடும்ப தகராறு காரணமாக தந்தையை , மகன் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
ராயப்பேட்டையை சேர்ந்த வெல்டிங்  தொழிலாளியான சங்கருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அவரது மூத்த மகன் ராமகிருஷ்ணன் தாக்கியுள்ளார். பின்னர் வீட்டில் தீக்காயத்துடன் அலறி துடித்த சங்கர் கீழ்ப்பாக்கம் அரசுமருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.  சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனார். தந்தையை தீயிட்டு கொளுத்தியதாக  ராமகிருஷ்ண்ன் மீது அவரது சகோதரர் விஜய் போலீல் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்