"நாங்கள் செய்த சீர், மொய் பணத்தை திரும்ப கொண்டுவாருங்கள்" : இணையதளங்களில் பரவும் வினோத திருமண பத்திரிக்கை

கோவை, அரியலூர் தம்பதிகளின் வினோத திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Update: 2018-11-08 06:24 GMT
கோவை, அரியலூர் தம்பதிகளின் வினோத திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் அரியலூர் மாவட்டம் சென்னிவனம் பகுதியை சேர்ந்த முத்துலெட்சுமி என்பவருக்கும் கடந்த நான்காம் தேதி திருமணம் நடைபெற்றது. அவர்களது திருமண பத்திரிக்கையில், 1980 ஆம் ஆண்டுக்கு பின் தங்கள் வீட்டில் நடைபெறும் முதல் சுபகாரியம் என்பதால், கடந்த 38 ஆண்டுகளாக நாங்கள் செய்த சீர் மற்றும் மொய்ப்பணம், அனைத்தையும் கொண்டுவருமாறு உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்