அபூர்வ சகோதரர்களின் இசையை ரசிக்கும் பக்தர்கள்..!

திருவிடைமருதூர் அருகே திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் நவராத்திரி விழாவில் இரு சகோதரர்களின் வயலின் இசை பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

Update: 2018-10-18 21:35 GMT
திருவள்ளியங்குடி சண்முகவடிவேல் என்பவரின் மகன்கள் அபினேஷ் மற்றும் அபிஷேக். பள்ளி மாணவர்களான இருவரும் தினமும் இரவு 8 மணிக்கு அம்பாள் சன்னதிக்கு வந்து வயலின் வாசித்து வருகின்றனர். இந்த அபூர்வ சகோதரர்களின் வயலின் இசை கேட்டு கோயிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் சன்னதியில் அமர்ந்து இசையை ரசிக்கின்றனர். அபூர்வ சகோதரர்களின் இசையை பாராட்டி பக்தர்கள் சிலர் பரிசுகள் வழங்கி வாழ்த்தி செல்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்