பட்டியல்-பழங்குடியின காலிபணியிடங்களை நிரப்ப அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டு, காலியாக உள்ள 2 ஆயிரத்து 670 பணியிடங்களை, 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

Update: 2018-10-18 08:18 GMT
காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, காலியிடங்களை நிரப்ப ஏதுவாக, விண்ணப்பங்களை வரவேற்கும் விளம்பரங்களை ஒரு மாதத்தில் வெளியிட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் மற்றும் மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குரகம் ஆகியவை இந்த தேர்வு நடைமுறைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நவம்பர் 16-ல் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்