குட்கா வழக்கு - விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் 2வது நாளாக சிபிஐ விசாரணை

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி சி.பி.ஐ தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட சம்மன் அடிப்படையில்,இரண்டாம் நாளாக காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆஜரானார்.

Update: 2018-10-13 08:00 GMT
* குட்கா முறைகேடு  வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி சி.பி.ஐ தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட சம்மன் அடிப்படையில்,இரண்டாம் நாளாக நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆஜரானார். 

* அவரிடம், குட்கா  நிறுவனத்தில் இருந்து யாரேனும் உங்களை அணுகினார்களா, மேல் அதிகாரிகளுக்கு முறையாக விளக்கம் அளித்தீர்களா, அதிகாரிகள் உங்களுக்கு ஏதேனும் அழுத்தம் கொடுத்தார்களா என்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

* 8 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்