தரை மட்டத்தில் இருந்து 5 அடி உயர்த்தப்படும் வீடு - கட்டுமான நிபுணர்கள் அசத்தல்

நாமக்கல் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த வீரமணி என்பவர், தனது வீட்டை 500 ஜாக்கிகள் மூலம் தூக்கி தரை மட்டத்தில் இருந்து 5 அடி உயர்த்தும் பணியை செய்து வருகிறார்.

Update: 2018-10-10 05:37 GMT
நாமக்கல் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த வீரமணி என்பவர், தனது வீட்டை 500 ஜாக்கிகள் மூலம் தூக்கி தரை மட்டத்தில் இருந்து 5 அடி உயர்த்தும் பணியை செய்து வருகிறார். ஆயிரத்து 400 சதுர அடி கொண்ட வீட்டை உயர்த்தும் பணியில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 500 ஜாக்கிகள் வைத்து வீட்டை உயர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழைக்காலத்தில் வீட்டிற்குள் மழை நீர் தேங்கும் பிரச்சனைக்கு  தீர்வு காணும் வகையில் இதனை செய்து வருவாதக வீட்டின் உரிமையாளர் வீரமணி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்