இளம்பெண் தற்கொலை : பிரேத பரிசோதனை செய்ய மறுத்த அரசு மருத்துவமனை

மதுரை திருமங்கலம் ஆத்துமேடு பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் பிரேத பரிசோதனை செய்யாமல், அவருக்கு உயிர் இருப்பதாக கூறி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Update: 2018-10-07 03:50 GMT
மதுரை திருமங்கலம் ஆத்துமேடு பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.  சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் பிரேத பரிசோதனை செய்யாமல், அவருக்கு உயிர் இருப்பதாக கூறி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அந்த பெண் 2 மணி நேரத்திற்கு முன்பாகவே இறந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனை செய்யாமல் அலட்சியம் செய்ததால அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்