பெண் வழக்கறிஞர் பாலியல் புகார் - நீதிபதி ராஜவேல் பணியிடை நீக்கம்

பெண் வழக்கறிஞர் அளித்த பாலியல் புகாரின் பேரில், சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-09-25 11:59 GMT
சத்தியமங்கலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜவேல், இளம்பெண் வழக்கறிஞக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. வழக்கறிஞர்கள் அமைப்பு சார்பில் இது குறித்து, ஈரோடு மாவட்ட குற்றவியல் நீதிபதி மற்றும் முதன்மை அமர்வு நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், நீதிபதி ராஜவேலுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக கிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். பாலியல் புகாரின் நீதிபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டது, நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்