புஷ்கரம் விழாவிற்கு அனுமதி மறுத்த விவகாரம் - அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தாமிரபரணி புஷ்கர விழாவை ஒட்டி தைப்பூசப் படித்துறையில் புனித நீராட தடை விதித்த உத்தரவை ரத்து செய்ய கோரிய மனுவுக்கு இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-25 10:33 GMT
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதியில் அக்டோபர் 12 முதல் 23ம் தேதி வரை புஷ்கரம் விழா நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, திருநெல்வேலியில் உள்ள தைப்பூசப் படித்துறை, குறுக்குத்துறை ஆகிய இடங்களில் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, விழாவை பாதுகாப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த புலவர் மகாதேவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், இந்து சமய அறநிலைய துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அக்டோபர் 3ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்