பணத்தை மூட்டையாக கட்டி சுமந்து வந்த வியாபாரிகள்

கூலி வாங்க மறுத்த வெங்காய மண்டி தொழிலாளர்கள்

Update: 2018-09-24 20:51 GMT
திருச்சியில் உள்ள வெங்காய மண்டியில் சுமார் 125க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில், தங்களுக்கான சம்பளத்தை உயர்த்தி வழங்கக் கோரி பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலைகளை தொடர்ந்து செய்து வரும் அவர்கள், சம்பளத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். 75 தொழிலாளர்களின் சம்பளமான 28 லட்ச ரூபாயை மூட்டையாக கட்டி தொழிலாளர் நலத்துறை இணை ஆணையரிடம் ஒப்படைக்க வந்தனர். ஆனால் அதனை தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் பெற்றுக் கொள்ள மறுத்தார். இதுகுறித்து உரிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்த பிறகே வியாபாரிகள் கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்