கடன் வாங்க விண்ணப்பித்தவரின் விவரங்களை திருடிய மர்ம கும்பல்

கடன் வாங்க விண்ணப்பித்தவரின் தகவல்களை திருடி அவருக்கு தெரியாமல் மோசடியாக கடன் வாங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-23 14:16 GMT
சென்னை தரமணியை சேர்ந்த மெக்கானிக் கடை உரிமையாளர் சத்தியமூர்த்தி என்பவர், வீட்டு கடன் கேட்டு தனியார் நிதி நிறுவனத்தில் விண்ணப்பித்துள்ளார். ஏற்கெனவே, 10-க்கும் மேற்பட்ட வங்கிகளில், சுமார் 5 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியிருப்பதாக கூறி, சத்தியமூர்த்தியின் கடன் விண்ணத்தை தனியார் நிதி நிறுவனம் நிராகரித்துள்ளது. 

இது குறித்து விளக்கம் கேட்ட போது, பான் உள்ளிட்ட தகவல்களை திருடி, தனக்கு தெரியாமலேயே, தனது பெயரில் இந்த கடன்கள் வாங்கப்பட்டுள்ளதை அறிந்து, சத்தியமூர்த்தி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சத்தியமூர்த்தி, இந்த நூதன மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்