திடீரென கவிழ்ந்த தேர்.. அலறி ஓடிய பக்தர்கள் - சித்திரை தேர் திருவிழாவில் பரபரப்பு

Update: 2024-05-03 06:56 GMT

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மலையாள பகவதியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழாவில் ஒருபக்கமாக தேர் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காலை தொடங்கியத் தேர் திருவிழா வெயிலின் தாக்கம் காரணமாக மாலை 5 மணிக்கு தூக்கிச் செல்லலாம் என முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், தேரின் 4 குத்துக் காலில் ஒருகால் பழுதடைந்து இருந்தது. தேரின் பின்பகுதியை சாய்த்து சரிசெய்ய முயன்றபோது, திடீரென ஒருபக்கமாக தேர் சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்