நாகர்கோவில் : மீனவர் கழுத்தை அறுத்து படுகொலை..!

நாகர்கோவிலில் மீனவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-09-23 13:14 GMT
இளங்கடை என்ற இடத்தை சேர்ந்த செல்வம், விசை படகில் ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த சகானா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்திருந்தார்.   நேற்றிரவு வீட்டில் இருந்து கடைக்கு சென்றவர், படுகாயம் அடைந்த நிலையில் சாலையில் கிடப்பதாக தகவல் வந்தது. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த செல்வத்தை உறவினர்கள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பயனின்றி அவர் இறந்து போனார். 

Tags:    

மேலும் செய்திகள்