கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல் - உயர்நீதிமன்றம் உத்தரவு

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2018-09-21 06:58 GMT
காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிந்திருப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிகள் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்தனர். சாலை விபத்துகள் அதிகரிப்பதால், இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்