அதிமுக தொண்டரை காவல் ஆய்வாளர் தாக்கிய வழக்கு : நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

அதிமுக பிரமுகர் புகழேந்தி என்பவரை காவல் ஆய்வாளர் சுரேஷ் பீட்டர் சரமாரியாக தாக்கிய விவகாரத்தில் 50 ஆயிரம் ரூபாய் புகழேந்திக்கு நஷ்ட ஈடாக ஒரு மாதத்திற்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Update: 2018-09-15 05:08 GMT
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்  புகழேந்தி என்பவரை காவல் ஆய்வாளர் சுரேஷ் பீட்டர் சரமாரியாக தாக்கியுள்ளார். இது குறித்து புகழேந்தி அளித்த புகார், மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் 50 ஆயிரம் ரூபாய் புகழேந்திக்கு நஷ்ட ஈடாக ஒரு மாதத்திற்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். காவல் ஆய்வாளர் சுரேஷ் பீட்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்துறை முதன்மை செயலாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்