செங்கோட்டை விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு, தடியடி...

நெல்லை மாவட்டம், செங்கோட்டை பகுதியில் போடப்பட்ட 144 தடை உத்தரவு இன்று காலை வரை தொடரும் என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-15 03:23 GMT
அங்கு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஊர்வலமாக எடுத்து சென்ற போது ஒரு தரப்பினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அப்பகுதிக்கு வந்து இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது. இதனையடுத்து சிலைகள் காவல்துறை 
பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு குண்டாறு நதிக்கரையில் கரைக்கப்பட்டது. இந்நிலையில் செங்கோட்டை பகுதியில் 
போடப்பட்ட 144 தடை உத்தரவு இன்று காலை வரை தொடரும் என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்