தூத்துக்குடி : மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்த கணவன் வெட்டி கொலை..!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்த இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்காநாயக்கன்பட்டியை சேர்ந்த உதயக்குமார் என்பவர் தமது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் சமரச பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த, உதயகுமார் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையாளி பற்றி விசாரித்து வருகின்றனர்.