விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 ஆயிரம் விநாயகர் சிலைகள் கண்காட்சி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சிட்லபாக்கத்தில் 10 ஆயிரம் விநாயகர் சிலைகள் இடம் பெற்ற கண்காட்சி நடைபெற்றது.

Update: 2018-09-13 02:52 GMT
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சிட்லபாக்கத்தில் 10 ஆயிரம் விநாயகர் சிலைகள் இடம் பெற்ற கண்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து12 வது ஆண்டாக நடைபெறும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள விதவிதமான பிள்ளையார் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

508 விநாயகர் சிலை பிரதிஷ்டை:



விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் 508 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை நடைபெற்றது. கண்களை கவரும் வண்ணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த விநாயகர் சிலைகள், சிறப்பு பூஜைக்கு பின்னர்  பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அவற்றை எடுத்துச் சென்ற பக்தர்கள் வீட்டில் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்