பாறையில் இருந்து தவறி விழுந்த காட்டெருமை : 4 நாட்களாக உயிருக்கு போராட்டம்
குன்னூர் அருகே மூப்பர்காடு கிராமத்தில் 10 அடி உயர பாறையில் இருந்து தவறி விழுந்த காட்டெருமை ஒன்று கடந்த 4 நாட்களாக உயிருக்கு போராடி வருகிறது.
குன்னூர் அருகே மூப்பர்காடு கிராமத்தில் 10 அடி உயர பாறையில் இருந்து தவறி விழுந்த காட்டெருமை ஒன்று கடந்த 4 நாட்களாக உயிருக்கு போராடி வருகிறது. உயரத்தில் இருந்து விழுந்ததில் காட்டெருமையின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கிராமமக்கள் கூறுகின்றனர்.இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கிராமமக்களே தங்களுக்கு தெரிந்த மருத்துவ முறைகளை கையாண்டு வருகின்றனர்.