"கேரளாவுக்கு ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதி" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Update: 2018-08-12 01:25 GMT
கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி வளர்ச்சிக்காக, துணை நிலை ஆளுநர்  கிரண்பேடி செயல்பட்டால் தாம் ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் செய்தியாளர்களிடம் நாராயணசாமி  கூறினார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் வெண்கல சிலை அமைப்பதற்காக அமைச்சர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்