சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் வீடு மற்றும் காருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், சேலையூரை சேர்ந்த வினோத்குமாரை மதுபோதையில் ஒருவர் தாக்கிய நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.